மன்னார் திருக்கேதீச்சர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் திருக்கேதீச்சரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (24) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
-ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக அமெரிக்காவில் உள்ள புளோரிடா நிறுவனத்தில் 'சி-14 காபன்' பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை வழங்கு தொடுனர் சார்பாக எடுத்திருந்த நிலையில் கடந்த தவணை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களை பகுந்தெடுத்து பகுப்பாய்வு நடவடிக்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வழக்கு தொடுனர்கள் கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தனர்.
அனுராதபுரம் நீதவான் முன்னிலையில்,அவ்வாறான பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு,அல்லது மன்னார் நீதவான் அதற்கு உறுதுணை புரிந்து அவரின் மேற்பார்வையின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு கட்டளை ஒன்றை வழங்குமாறும்,அதற்கான கட்டளை ஒன்று இன்று புதன்கிழமை(24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி,மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.
-குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி (21-09-2022) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
வழக்குத் தொடுனர் இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று புதன்கிழமை கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்
மன்னார் திருக்கேதீச்சர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!
Reviewed by Author
on
August 24, 2022
Rating:

No comments:
Post a Comment