அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடு செல்வோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் வழங்கும் விசேட வேலைத்திட்டம்

இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையத்தில் கொரோனா 3வது 4வது தடுப்பூசிகள் ஏற்றும் ஒரு நாள் விசேட வேலைத்திட்டம் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ரேஷ்ணி துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவிக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

 அவர்களுக்கான தடுப்பூசி அட்டைகளும் இன்று வழங்கப்பட்டது. லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர்கள் வருகை தந்து தமக்கான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்விசேட வேலைத்திட்டத்தில் லிந்துலை பொது சுகாதார அதிகாரிகள் லிந்துலை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி,குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


வெளிநாடு செல்வோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் வழங்கும் விசேட வேலைத்திட்டம் Reviewed by Author on August 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.