அண்மைய செய்திகள்

recent
-

மரத்தில் சிக்கிய மலைப்புலி

வலையில் சிக்கிய மலைப் புலியொன்று பொறியை உடைத்து மரத்தில் ஏறிய நிலையில் மரக்கிளையில் சிக்கியுள்ளதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா தோட்டத்தின் சம்மர்ஹில் பிரிவில் இன்று இந்த மலைப்புலி சிக்கியுள்ளது. 

 தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மலைப்புலிகள் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட கும்பல் அமைத்த வலையில் சிக்கிய மலைப்புலி பொறியை உடைத்து மரத்தில் ஏறி தப்பிக்க முயன்ற பொது மரத்தில் சிக்கிக்கொண்டுள்ளது . மரத்தின் நடுவில் சிக்கியுள்ள மலைப்புலியை ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர் அகலங்க் பினிதெனியவின் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க திட்டமிட்டுள்ளதாக .பிரபாஷ் கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.


மரத்தில் சிக்கிய மலைப்புலி Reviewed by Author on August 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.