அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

 

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர். 

 

சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) இந்த ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து வினவிய போதே அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.





பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-! Reviewed by Vijithan on May 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.