நானுஓயாவில் வீதி தாழிறக்கம் ; வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும் நானுஓயாவில் இருந்து டெஸ்போட் வழியாகச் செல்லும் வீதியில் காபட் இட்டு சுமார் ஒரு வருடம் ஆனால் உரிய முறையில் சீரமைக்கப்படாததால் தற்போது பாரிய அளவில் வெடிப்புகள் தோன்றியுள்ளன எனவும் குறித்த வீதியில் பயணஞ் செய்யும் கனரக வாகனங்கள் இவ்விடத்தில் விபத்துக்குள்ளாவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த இடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நானுஓயாவில் வீதி தாழிறக்கம் ; வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
Reviewed by Author
on
August 07, 2022
Rating:

No comments:
Post a Comment