'கெளரவமான அரசியல் தீர்வை' கோரி 25வது நாளக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போரட்டம்
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ , சட்டத்தரணி சர்மிலன் டயஸ் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக சட்டத்தரணி சர்மிலன் டயஸினால் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'கெளரவமான அரசியல் தீர்வை' கோரி 25வது நாளக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போரட்டம்
Reviewed by Author
on
August 25, 2022
Rating:

No comments:
Post a Comment