அண்மைய செய்திகள்

recent
-

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் -பந்துல குணவர்தன

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்காவிட்டாலோ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். கொள்கை கட்டமைப்பின் மூலம் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர்கள் அமைச்சரவையில் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

 கடந்த ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியனாக இருந்ததாகவும், அதில் மொத்தம் ரூ.1,115 பில்லியன் அரச துறையின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செலுத்தியதன் பின்னர் அரசாங்கத்திற்கு வரி வருமானத்தில் 153 பில்லியன் ரூபா மாத்திரமே மீதம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கு மாத்திரம் அரசாங்கத்திற்கு 1,000 பில்லியனுக்கும் அதிகமான தொகை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். யார் ஆட்சிக்கு வந்தாலும் அரச துறையின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதியை எந்த கட்சியாலும் பெற முடியாது. அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 4 பில்லியன் ரூபா எனவும், நாளாந்த செலவீனம் சுமார் 10 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார். வருமானம் இல்லாததால் அரசாங்கம் நாளாந்தம் சுமார் 6 பில்லியன் ரூபா கடனாளியாகின்றது. எனவே அரசாங்கம் தனது செலவீனங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் -பந்துல குணவர்தன Reviewed by Author on August 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.