அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது

இலங்கைக்கான நோர்வே தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றினூடாக இந்த விடயத்தை நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. வௌிநாடுகளிலுள்ள இராஜதந்திர அலுவலக வலையமைப்பு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதற்கமைய, வௌிநாடுகளிலுள்ள 5 தூதரகங்களை நிரந்தரமாக மூட தீர்மானித்துள்ளதாகவும், அதில் இலங்கையிலுள்ள தூதரகமும் உள்ளடங்குவதாகவும் நோர்வே அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள தமது தூதரகம் மூடப்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை உள்வாங்கும் வகையில், மற்றுமொரு நோர்வே தூதரகத்தில் தலைமை அதிகாரியையும் இராஜதந்திர ஊழியர்களையும் நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் நோர்வே அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது Reviewed by Author on September 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.