அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எனவே யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­கான முறை­யான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலை­வர்­கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்பிடதக்கது.


வடமாகாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு Reviewed by Author on September 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.