அண்மைய செய்திகள்

recent
-

100 ரூபாவிற்காக சிறுவனை தாக்கிய நபர் தப்பி ஓட்டம் : 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின் உயிர் பிழைத்த சிறுவன்

பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் ஒருவனை பதுளை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழாம் சுமார் 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றியுள்ளனர். 100 ரூபா கோரிய நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் சிறுவனின் தாய் தெரிவித்ததாக வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்தகெட்டிய – களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுடைய இச்சிறுவன், நேற்று மாலை 6 மணியளவில் தனது தந்தைக்கு தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை வாங்கி வருவதற்காக கடைக்குச் சென்றுள்ளான். 

 அதன்போது, ​​வீதியில் நின்றிருந்த நபர் ஒருவர் சிறுவனிடம் இருந்த 100 ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த சிறுவன் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இரவு 8.10 அளவில் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதிகாலை 3 மணிவரை சிகிச்சை தொடர்ந்ததாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். சிறுவனின் தோற்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், ஒரு பகுதியில் கூரிய ஆயுதம் நுரையீரல் வரை ஊடுருவியிருந்ததாகவும், வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்திய நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


100 ரூபாவிற்காக சிறுவனை தாக்கிய நபர் தப்பி ஓட்டம் : 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின் உயிர் பிழைத்த சிறுவன் Reviewed by Author on September 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.