பேசாலை கடல் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் கடற்படையினரால் கைது.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை ஊடாக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பேசாலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று புதன்கிழமை(14) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும்,ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.
-மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி (14-12-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பேசாலை கடல் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் கடற்படையினரால் கைது.
Reviewed by Author
on
September 15, 2022
Rating:

No comments:
Post a Comment