ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு.
மேலும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படை சிறைபிடிக்கப்பட்ட 115 படகுகளில் தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதில் எஞ்சிய 7 படகுகளுக்கும் அதே சேதமடைந்த 30 படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது,தற்போது தமிழக அரசால் வழங்கி வருகின்ற 1800 லிட்டர் மானிய டீசல் 3000 லிட்டர் ஆக உயர்த்தி தர வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதே போல மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை 13 ம் தேதி தங்கச்சிமடம் வலசை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிலில் நேரடியாகவும் சார்பு தொழிலாகவும் பத்தாயிரத்து மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு.
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment