அண்மைய செய்திகள்

recent
-

கல்கமுவயில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை


கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 16 மற்றும் 67 வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொலையை செய்த நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நிலையில், மாலையில் மனைவியின் தந்தை மற்றும் அயல் வீட்டில் வசித்த உறவு முறை சிறுவனொருவனுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

 இதன்போது சந்தேகநபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மனைவியின் தந்தையான 67 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 16 வயது உறவு முறை சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்கமுவயில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை Reviewed by Author on September 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.