அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை கிராம மீனவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி மன்னார் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -எனினும் மீனவர்களுக்கு தொழிலுக்கு செல்வதற்கு உரிய முறையில் எரிபொருள் (மண்ணெண்ணை) கிடைப்பதில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வங்காலை கிராம மீனவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை மன்னார் பிரதான பாலத்தடி யில் ஒன்று சேர்ந்த வங்காலை கிராம மீனவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மன்னார்-பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் கையளித்தனர். -அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்ற வங்காலை கிராம மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அரச அதிபரிடம் கையளித்தனர். -இதன் போது மீனவர்கள் தமது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்தனர். -மன்னார் வங்காலை கிராமத்தில் சுமார் 900 மீனவ குடும்பங்கள் கடல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது மீனவர்களுக்கு சுமார் 10 நாட்களுக்கு ஒரு தடவை 5 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. -ஆனால் கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த எரிபொருள் எமக்கு காணாது. -ஒரு படகில் தொழிலுக்கு சென்று வர ஒரு நாளைக்கு குறைந்தது 50 லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது எமக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளது. -எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணை மறைமுகமாக கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.அதை 800 ரூபாய் கொடுத்து வாங்கி தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மீனவ அமைப்பிற்கு 340 ரூபாவிற்கு எண்ணை வழங்கப்படுகிறது.ஆனால் போதிய அளவு மண்ணெண்ணை எங்களுக்கு கிடைப்பதில்லை.ஆனால் குறித்த எரிபொருள் எவ்வாறு தனியார் வியாபாரிகளுக்கு கிடைக்கிறது என்று எமக்கு தெரியவில்லை. 

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது எமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.இதன் காரணமாக வே வங்காலை கிராம மீனவர்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை மன்னாரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம். கடல் தொழில் திணைக்களம் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு உடனடியாக எமது எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தர கோரி மகஜர் ஒன்றை கையளித் துள்ளோம். -கால தாமதம் இன்றி வங்காலை கிராம மீனவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.இல்லை என்றால் அனைத்து மீனவர்களையும் ஒன்றினைத்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்.என குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










மன்னார் வங்காலை கிராம மீனவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by Author on October 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.