அண்மைய செய்திகள்

recent
-

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – பெண் ஒருவர் உயிரிழப்பு!

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் சமயலறையில் தனது மகளுடன் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து குறித்த பெண் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள அதேவேளை மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு கூறியுள்ளனர்.







பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – பெண் ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Author on October 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.