அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு முன்னெடுப்பு.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (5) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தின் முட்கொம்பன் சந்தை வீதியில் இடம் பெற்றது. வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள், இளைஞர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் முன் வைத்தனர்..

 இளைஞர்கள்,பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 66 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தின் முட்கொம்பன் சந்தை வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது








.
வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு முன்னெடுப்பு. Reviewed by Author on October 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.