அண்மைய செய்திகள்

recent
-

தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன

பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “மசகு எண்ணெய் ஊடாக மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியாது.மொத்த எரிபொருள் தேவையின் 30 சதவீதமளவு மாத்திரம் தான் மசகு எண்ணெய் சுத்திரகரிப்பு ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

 70 சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது. டீசல் விநியோகத்தில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட நிவாரணம் நீக்கப்பட்டுள்ளது. டீசல் விநியோகத்தின் நிவாரணம் நீக்கப்பட முன்னர் ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் போது 30 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்ள நேரிட்டது. ஆகவே தற்போது டீசலின் விலையை குறைக்க முடியாது.பெற்றோல் இறக்குமதியில் 70 சதவீத இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது. எதிர்வரும் 14 நாட்களுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் போது தற்போதைய விலை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பினை கொண்டு தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது” என்றார்.

தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன Reviewed by Author on October 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.