அண்மைய செய்திகள்

recent
-

ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி பலி!

இன்று (17) அதிகாலை அஹுங்கல்ல, பலபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹீனடிய ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஹீனடிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று மூடப்பட்ட ரயில் கடவையை உடைத்துக்கொண்டு கொலன்னாவிலிருந்து காலி நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 40 வயதுடைய ஹீனடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன், அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி பலி! Reviewed by Author on November 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.