அண்மைய செய்திகள்

recent
-

காய்கறி விலை மீண்டும் உயர்வு

உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக ஹட்டன் நகர மரக்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகவும், வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலையுடன் சேர்த்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.800 ஆக அதிகரித்துள்ளது. 

அதன்படி, ஒரு கிலோ கேரட் ரூ.350, கோவா ரூ.280, போஞ்சிக்காய் ரூ.450, கத்தரிக்காய் ரூ.350, லீக்ஸ் ரூ.270, நாட்டு உருளைக்கிழங்கு ரூ.350, பூசணி ரூ.250, முருங்கைக்காய் ரூ.240, உருளைக்கிழங்கு ரூ.350, முள்ளங்கி ரூ.350, பீட்ரூட் ரூ.250., அவரைக்காய் ரூ.300, வெண்டைக்காய் ரூ.320, பச்சை மிளகாய் ரூ.400, குடை மிளகாய் ரூ.1000, பாகற்காய் ரூ.400, மாங்காய் ரூ.650, பலாக்காய் ரூ.120, மரவள்ளிக்கிழங்கு ரூ.130, வற்றாளைக்கிழங்கு ரூ.180, வெள்ளரிக்காய் ரூ.180 . என மரக்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.


காய்கறி விலை மீண்டும் உயர்வு Reviewed by Author on November 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.