அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பாதுகாவலியாம் புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா திருப்பலி நேற்று  வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் 10 குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர். பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த திருவிழாவை கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் புதன்கிழமை(7) மாலை வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் 10 குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சொரூப பவனியும் ஆசியும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் போது போசாலை மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித வெற்றி நாயகி அன்னையின் ஆசிரை பெற்றனர்.




சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா Reviewed by Author on December 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.