போதைப்பொருள் பாவனைக்காக யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் : தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை !
போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்காக யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் : தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை !
Reviewed by Author
on
December 21, 2022
Rating:

No comments:
Post a Comment