அண்மைய செய்திகள்

recent
-

மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து கொன்ற கணவன்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியன் குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான ஜெயக்குமார் புவனேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

 குறித்த வயல் பிரதேசத்தில் வேளாண்மை செய்துவரும் விவசாயி ஒருவரின் வயலுக்கு வேளான்மை காலலுக்கு அமர்தப்பட்ட கரடியன் குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளை கொண்ட வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது 10 வயதான மூத்த பிள்ளையை அவரது அம்மம்மாவுடன் தங்க வைத்துவிட்டு அவரது மனைவி மற்றும் 5 மற்றும் 3 வயது குழந்தையுடன் வயலில் காவலுக்காக அமைக்கப்பட்ட குடிசையில் தங்கி வந்துள்ளார். 

 இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது மனைவி ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றி சண்டையாக மாறியதையடுத்து அங்கிருந்த மண்வெட்டிப் பிடியினால் மனைவி மீது மேற்கொண்ட தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட 35 வயதுடைய வல்லிபுரம் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்து நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து கொன்ற கணவன் Reviewed by Author on December 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.