அண்மைய செய்திகள்

recent
-

3 ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளது- விஜயதாச!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் போதை பொருள் களஞ்சியத்தில், 3 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய போதை பொருட்கள் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.

3 ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளது- விஜயதாச! Reviewed by Author on February 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.