சிசுவை ரயிலில் கைவிட்டுச்சென்ற பெற்றோருக்கு விளக்கமறியல்
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாயிடம் விசாரணை நடத்துவது குறித்து கவனம் செலுத்தாமல் அவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் செயற்பட தவறியுள்ளதாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிசுவை ரயிலில் கைவிட்டுச்சென்ற பெற்றோருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
March 13, 2023
Rating:

No comments:
Post a Comment