மன்னாரில் கோர விபத்து சாரதி மரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் பிரதான பலத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை(23) காலை 11 மணியளவில் மகேந்திரா ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம் பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்
வீடியோ
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 9 வயது,6 வயது,4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்களாக ஐவர் நாளைய இடம் பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்கான முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் வருகை தந்த நிலையில் மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
மன்னாரில் கோர விபத்து சாரதி மரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
May 23, 2023
Rating:

No comments:
Post a Comment