ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்
”ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை” என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
இணையவழி மூலம் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாகவே கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதற்கிணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
.jpg)
No comments:
Post a Comment