ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஆபாசப் படம் அனுப்பியவர் கைது
ஓய்வு பெற்ற பெண் அரச நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில், 48 வயதான நபர் ஒருவரை வெயங்கொடை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் பதுளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், குறித்த அதிகாரி பதவியில் இருந்தபோது அவரின் உத்தியோகபூர்வ வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஆபாசப் படம் அனுப்பியவர் கைது
Reviewed by Author
on
June 17, 2023
Rating:

No comments:
Post a Comment