அண்மைய செய்திகள்

recent
-

யாழில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : சிறிய தந்தை பொலிஸாரால் கைது!

 சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டுக்கு இரவு வேளைகளில் செல்லும், சிறுமியின் தந்தையின் சகோதரன், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, குறித்த சிறுமி தனக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு உத்தியோகஸ்தர்கள் அறிவித்ததை அடுத்து , சிறுமியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



யாழில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : சிறிய தந்தை பொலிஸாரால் கைது! Reviewed by Author on July 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.