வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெத்துள்ளனர்.
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
July 21, 2023
Rating:

No comments:
Post a Comment