மீண்டும் ஒரு மர்ம மரணம்
நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில், கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று முற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான, 56 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நித்திரைக்கு சென்ற குறித்த பெண், இன்று காலை வீட்டிலிருந்து காணாமல்போயிருந்தமையினால், அவரை தேடும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, கெசல்கமுவ ஓயாவிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக நோர்வூட் காவல்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு மர்ம மரணம்
Reviewed by Author
on
July 18, 2023
Rating:

No comments:
Post a Comment