யாழில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மி.கி. ஐஸ், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர்.
யாழில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது
Reviewed by Author
on
July 15, 2023
Rating:

No comments:
Post a Comment