அண்மைய செய்திகள்

recent
-

நால்வருடன் நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

 ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று(09) பிற்பகல் 03:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், மஸ்கெலியா, நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா, ஹபுகஸ்தென்ன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பை சேர்ந்தவர்கள், அவர்கள் இறுதி சடங்கிற்கு வந்திருந்த நிலையில், அந்த சடங்கிற்கு தேவையான பொருட்களை மஸ்கெலியா நகரில் வாங்கியுள்ளனர்.

பின்னர் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்



நால்வருடன் நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி Reviewed by Author on August 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.