அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை.

 தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக  படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர்.


மேலும் குறித்த மீனவர்களை   தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (13) மாலை வரை அவர்கள்  கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் காற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உடன் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மீனவர்களை தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.


தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை. Reviewed by Author on September 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.