அண்மைய செய்திகள்

recent
-

பதாதைகளை அகற்ற முற்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!! பொலிசார் அராஜகம்!

 வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு சேறு பூசும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றி முற்றுகையிடப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டார்.


வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப்புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்துவதற்கான காரணத்தினால் முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை அகற்றுமாறு தெரிவித்தார்.

 இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் அவரை, வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர்.  அவர் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்,அவருக்கு பிணைவழங்கி நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரும் வவுனியா ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிசார் பக்கச்சார்பான முறையில் அதே வழக்கினை தாக்கல் செய்தது.  இதனால் அவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் முன்னாள் போராளி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் ஆயராக இருந்தனர்.


பதாதைகளை அகற்ற முற்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!! பொலிசார் அராஜகம்! Reviewed by Author on November 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.