விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டும் நடவடிக்கை நாளை தொடரும்.
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) வேண்டும் காலை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இன்று மூன்று மணியுடன் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் நாளைய தினம் அகழ்வு பணிகள் தொடரப்பட இருக்கின்றது.
இது தொடர்பான வழக்கு கடந்த 19.11.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19-11-23 அன்று வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதி பெறப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வு பணி இடம்பெற்றிருந்தது.
கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வந்திருந்தது.
ஆனால் இன்றைய அகழ்வு பணிகளில் எந்தவொரு பொருட்களும் மீட்கப்படாத நிலையில் நாளை (24.11.2023) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக பெரிய கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை நாளை இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது
விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டும் நடவடிக்கை நாளை தொடரும்.
Reviewed by Author
on
November 23, 2023
Rating:

No comments:
Post a Comment