அண்மைய செய்திகள்

recent
-

06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

 06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்



கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 06 தொடக்கம் 09 மாத (வயதுடைய) குழந்தைகளுக்காக மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஷீர் அவர்களின் தலைமையில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (06) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாளிகைக்காடு சுகாதார நிலையம் மற்றும் மாவடிப்பள்ளி சுகாதார நிலையம் ஆகிய மூன்று நிலையத்திலும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் கலந்துகொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தாதிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் Reviewed by வன்னி on January 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.