புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி
புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி
நாட்டின் பொருளாதாரத்தைக்கட்டியெழுப்ப புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி)
தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தைக்கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கக்கூடிய பொதுமக்களின் பூரண ஆதரவுடன் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயமுள்ள அரசியல் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் கௌரவ அமைச்சர் நலின் பெனான்டோ அவர்களின் தலைமையில் இஸ்தாபிக்கப்பட்ட புதிய கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளது.
அத்துடன், சுமார் 77 பாராளுமன்ற உறுப்பினர்கள், இணைந்து செயற்படவிருப்பதுடன், நாடளாவிய ரீதியில் இக்கூட்டணியை விஸ்தரிக்க இவர்களோடு சேர்ந்து ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி மும்முரமாக அரசியலில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், மேலும் இக்கூட்டணியின் நோக்கம் குடும்ப அரசியல் இல்லாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதும் அந்தத் தலைமைத்துவம் நாட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கக்கூடிய ஒருவரை உருவாக்கவிருப்பதாகவும் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் இப்புதிய கூட்டணியில் இணைந்து பயணிக்க நிறைய அரசியல் பிரமுகர்கள் தமிழ், முஸ்லிம் சிவில் அமைப்புகள் தங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது என ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி) மேலும் தெரிவித்தார்.
புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி
Reviewed by வன்னி
on
February 02, 2024
Rating:

No comments:
Post a Comment