யாழில் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை !
யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ளநிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை !
Reviewed by Author
on
June 25, 2024
Rating:

No comments:
Post a Comment