அண்மைய செய்திகள்

recent
-

ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிழப்பு! இருவர் காயம்

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9  வீதியில் 228 வது கிலோமீற்றர்  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது  இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள்  இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி  ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில்  வீதியில் நின்ற நபர்கள்  மூவர் பார ஊர்தியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி  பலியாகியுள்ளனர்

பாரவூர்தி  சாரதி மற்றும் பேருந்தில்  பயணித்த  இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  







ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிழப்பு! இருவர் காயம் Reviewed by Author on June 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.