கழிவறை திரவத்தை பருக கொடுத்த தந்தை ஆறு வயது குழந்தைக்கு இலங்கையில் நடந்த பரிதாபம்
சமீப காலமாக வெளிநாட்டில் இருந்து பெண்கள் பணம் அனுப்பாததால் அவர்களின் பிள்ளைகள் தந்தையால் தாக்கப்படும் சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக பெற்றோர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவர்களே இவ்வாறான நிலைக்கு ஆளாக வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனமையானது பெரும் கவலைக்குரியது.
இதனடிப்படையில் தான் ஹம்பாந்தோட்டை பகுதியில் தந்தையொருவர் தனது 6 வயது மகளுக்கு கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை பருக்க கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக ஹங்கம பொலிஸார் விரைவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில்,
வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் ஹங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் கூழி தொழிலாளி எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் அவ்வேளையில் அதீத மதுபோதையிலிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை பருகிய சிறுமி, தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment