சிறப்பாக இடம் பெற்ற மருதுபாண்டியர்கள் கல்லூரியின் இளைங்கலை முதலாம் ஆண்டு தொடக்க விழா
>தஞ்சாவூரில் புகழ்புத்த கல்லூரிகளில் ஒன்றான மருதுபாண்டியர்கள் கல்லூரியில் 2024 ஆண்டுக்கான இளங்களை பாடபிரிவை கற்கும் மாணவர்களுக்கான முதல் வருட தொடக்க விழா மருதுபாண்டியர்கள் கல்லூரியின் நிறுவனர் மருதுபாண்டியன் தலைமையில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மங்களேஸ்வரன் அவர்களும்,கெளரவ விருந்தினர்களாக தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பறை அரங்காவலர் பாபாஜி ராஜ போன்ஸ்லே அவர்களும், விசேட விருந்தினர்களாக மருதுபாண்டியர்கள் கல்லூரியின் முதல்வர் தங்கராஜ், கல்லூரி முதல்வர் விஜயா,கல்வியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் கல்லூரியின் ஆராய்ச்சி புலத்தலைவர் அர்சுணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் இளம்கலை முதலாமாண்டு கற்கும் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்கள் உட்பட கல்லூரியின் நிர்வகத்தினரால் பல்வேறு உரைகளும் நிகழ்த்தப்பட்டது
குறித்த நிகழ்வுக்கு என விசேட அழைப்பின் பெயரில் வவுனியா பல்கலைகழக முன்னால் துணைவேந்தர் மங்களேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கல்லூரி நிர்வாகத்தினரால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 21, 2024
Rating:


No comments:
Post a Comment