அண்மைய செய்திகள்

recent
-

வன்னியில் 306,081 பேர் வாக்களிக்க தகுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில்  306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில்  306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலில் வாக்களிப்பதற்காக 3 மாவட்டங்களிலும் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12, முல்லைத்தீவில் 8, மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும்  என மொத்தமாக 37 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



வன்னியில் 306,081 பேர் வாக்களிக்க தகுதி! Reviewed by Author on August 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.