அண்மைய செய்திகள்

recent
-

ஊழியரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர்!

 நேற்று காலை வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில் மேலும் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

கொழும்பு 13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையில், உயிரிழந்தவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




ஊழியரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர்! Reviewed by Author on August 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.