அண்மைய செய்திகள்

  
-

அறுகம்பைக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாமென தனது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அறுகம்பைக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை கேட்டுக்கொள்வதாவ தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




அறுகம்பைக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை Reviewed by Author on October 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.