அண்மைய செய்திகள்

recent
-

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த பெண் பலி: கொழும்பில் சம்பவம்

கொழும்பில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து வீழ்ந்து 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள Aquaria அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு 8, கோட்ட வீதியில் வசித்து வந்த குறித்த பெண், அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த பெண் பலி: கொழும்பில் சம்பவம் Reviewed by Author on November 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.