அண்மைய செய்திகள்

recent
-

அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (07) கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணத்தை வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டதோடு, தற்போது சில்லறை சந்தையில் பேணப்பட்டு வரும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அவ்வாறே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் அரிசி இருப்புக்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.




அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு Reviewed by Author on November 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.