அண்மைய செய்திகள்

recent
-

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர மீனவர்கள் இன்று (5) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (4) காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும்,இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்..




ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது. Reviewed by Author on December 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.