மீனவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை வெள்ளி (28) முதல் தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (27) ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்ததையடுத்து மீனவர்கள் நாளை(28) திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
February 27, 2025
Rating:

.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment