அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கண்டி - தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


மேலும், அதே நாளில், களுத்துறை - பேருவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெட்டிமுல்ல, மல்பொக்க வீதி உள்ளிட்ட அண்டிய வீதிகள் சீர்திருத்தப்படுவதாகவும் முறைப்பாடு கிடைத்திருந்தது.


இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேருவளை பிரதேச சபையால் இந்த சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது. 


அதன்படி, சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு Reviewed by Vijithan on March 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.