மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
May 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
May 22, 2025
Rating:


No comments:
Post a Comment